நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம் . ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா சோதனைத் திட்டம் உள்ளது எனவும் நேற்று திங்கட்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்கா மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. வேறு எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானது. நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம். சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டார்.
சீனா உலகத்திற்கு செய்த கொடுமையை மறந்துவிடக்கூடாது. கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம் எனவும் எனவும் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.
அமெரிக்காவில் இதுவரை 34 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 137,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்த ட்ரமப், கடந்த ஒருவாரமாக தினசரி 50 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும் வேதனை தெரிவித்தார்.